ஜெயலட்சுமி: இளங்கோவனுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்இளங்கோவன் நான்கு நாட்கள் சென்னை செல்ல மதுரை உயர் நீதிமன்றக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
சிவகாசி ஜெயலட்சுமி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த இளங்கோவன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில்விடுதலையானார். மதுரையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனைவிதித்திருந்தது.
இந் நிலையில் வேறு ஒரு வழக்கில் ஆஜராவதற்காக சென்னை செல்ல அனுமதி கோரி இளங்கோவன் உயர்நீதிமன்றக் கிளையில் மனுச்செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 நாட்கள் சென்னை சென்று வர அனுமதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications