சங்கரராமன்: ஜெயேந்திரருக்கு டிச-23 வரை காவல் நீடிப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் சிறைக் காவல் வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெயேந்திரரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவரது காவல் வீடியோ கான்பரன்சிங் மூலம்இன்று நீட்டிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாத காரணத்தால் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன்இன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தார்.
அங்குள்ள வீடியோ கான்பரன்சிங் அறையிலிருந்து வேலூர் சிறையில் உள்ள ஜெயேந்திரருடன் அவர் தொடர்பு கொண்டு விசாரணைநடத்தினார். பின்னர் சிறைக் காவலை வருகிற 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றமும் வீடியோ கான்பரன்சிங் மூலம்சங்கராச்சாரியாரின் காவலை டிசம்பர் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications