ஜெ-சசி நட்பை உடைக்க முயன்ற சங்கர மடம்!!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா இடையிலான நட்பில் விரிசல் ஏற்படுத்தும் வேலையில் சங்கராச்சாரியார் ஈடுபட்டதாகவும் அதைத் தொடர்ந்தே சங்கரராமன் கொலை வழக்கில் நடவடிக்கை பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து ஒதுக்கும் வேலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த விஐபிக்கள் களம் இறங்கியதாகவும், இதற்கு சங் பரிவார், பா.ஜ.கவின் ஆசியும் இருந்ததாகவும் தெரிகிறது.
அந்த விஐபிக்களின் முயற்சிகளை முதல்வர் உணர்ந்திருந்ததாகவும், அவர்களுக்கு தக்க பதிலடி தர காத்திருந்ததாகவும் சொல்கிறார்கள்.
இந் நிலையில் தான் கவர்னராக இருந்த ராம்மோகன் ராவுக்கு திமுக தரப்பு ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கியது. அப்போது அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டார்.
இதற்காக ஒரு கட்டத்தில் சங்கர மடத்தின் உதவியும் நாடப்பட்டதாகவும், ஆனால் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து ஒதுக்கி வைத்தால் உதவத் தயார் என்று அதிரடியாக பதில் வந்ததாம்.
சங்கர மடத்தை நோக்கி, பிரம்மாஸ்திரம் பாய முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications