For Daily Alerts
Just In
ஜெயேந்திரர்: தே.ஜ.கூ. குழு வருகை ஒத்திவைப்பு!
டெல்லி:
ஜெயேந்திரரை வேலூர் சிறையில் சந்திப்பதற்காக வரவிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழுவின் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க ஒரு குழுவை அனுப்புவது என சமீபத்தில் வாஜ்பாய்-அத்வானிமுன்னிலையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக் குழு இன்று (சனிக்கிழமை) வேலூர் வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் வருகை திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தே.ஜ.கூ. குழு திங்கள்கிழமை வேலூர் செல்ல இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் கைதிகளைப் பார்க்கக்கூடாது என்று சிறை நிர்வாக விதிகள் உள்ளதால் அதை மதித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழு திங்கள்கிழமை வேலூர்செல்கிறது என்றார்.
chennai tamil nadu bjp news vhp nda raghu swarnamalya kanchi sankarachariyar vijayendrar sexual assault premkumar
Story first published: Saturday, December 11, 2004, 5:30 [IST]