செக் மோசடி: ரம்பாவின் தந்தைக்கு வாரண்ட்
மதுரை:
காசோலை திரும்பி வந்த வழக்கில் நடிகை ரம்பாவின் தந்தை வெங்கடேச ராவுக்கு மதுரை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
நடிகை ரம்பாவின் தந்தை வெங்கடேச ராவ். இவர் மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கர் ராம்என்பவரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக சில காசோலைகளை அவர்கொடுத்துள்ளார்.
ஆனால் வெங்கடேச ராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்த மதுரைநீதித்துறை 2வது நடுவர் நீதிமன்றத்தில் சங்கர் ராம் வழக்குத் தொடர்ந்தார்.
இதில் ஆஜராகுமாறு கூறி வெங்கடேச ராவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் வெங்கடேச ராவ்வரவில்லை.
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆஜராகுமாறு கூறி வெங்கடேச ராவுக்கு வாரண்ட் பிறப்பித்துநீதிபதி சீதாராமன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications