எம்.எஸ்ஸுக்கு ஜெ, கருணாநிதி நேரில் அஞ்சலி
சென்னை:
மறைந்த இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் இன்று நேரில்அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் நேற்று இரவு மரணமடைந்த எம்.எஸ்.சுப்புலட்சமியின் உடல் கோட்டூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா அமைச்சர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்ட இரங்கற் செய்தியில், உலகம் ஒரு சிறந்த பாடகியையும்,சிறந்த பெண்மணியையும் இழந்துவிட்டது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை தனது மனைவி தயாளு அம்மாளுடன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.உடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் சென்றிருந்தார்.
கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதையில்,
பூமி குளிரப் பொழிந்து கொண்டிருந்த
இசை மழை ஓய்ந்து விட்டது.
காற்றிலே வரும் கீதம்;
காற்று நின்றாலும், கீதம்
ஒலித்துக் கொண்டே இருக்கும்
என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்,முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசிய அளவிலும், உலக அளவிலும் கர்நாடக இசையைப் பரப்பி சாதனை படைத்தவர்எம்.எஸ். என்று கூறியுள்ளார்.
தொழிலதிபரும், எம்.பியுமான எம்.ஏ.எம். ராமசாமியும் எம்.எஸ். உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறுஅரசியல் பிர முகர்கள், இசைக் கலைஞர்கள், திரையுலகினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி வருகின்றனர்.
ப.சிதம்பரம் இரங்கல்:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக சங்கீதத்திற்குஎம்.எஸ். ஆற்றிய தொண்டு அவருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கும் சர்வதேச புகழைத் தேடித் தந்தது. அவரது குடும்பத்தாருக்கு எனதுஇரங்கல்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications