வி.எச்.பியின் சலோ காஞ்சி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா:
ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி வருகிற 16ம் தேதி முதல் சலோ காஞ்சி போராட்டத்தை நடத்தவுள்ளதாக விஸ்வ இந்து பரிஷத்அமைப்பு தெரிவித்துள்ளது.
விஸ்வ இந்து பரிஷத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஒய்.ராகவலு விஜயவாடாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம்கூறுகையில், சர்வதேச சதியின் காரணமாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறு மாநில சிறைக்கு மாற்ற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்திவருகிற 16ம் தேதி முதல் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகள், தர்மாச்சாரியார்கள் கலந்து கொள்ளும் சலோ காஞ்சி போராட்டம்நடத்தப்படும்.
சிபிஐக்கு இந்த வழக்கை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றார் ராகவலு.












Click it and Unblock the Notifications