ராஜிவ் கொலை: சந்திராசாமிக்கு எதிராக ஆதாரம்
டெல்லி:
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்திரா சாமிக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐதெரிவித்துள்ளது.
சந்திரா சாமி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிநாட்டில்வாழும் தனது பக்தர்களை சந்திக்க 2 மாதங்கள் அனுமதி தருமாறு கோரி சந்திரா சாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, ராஜீவ் கொலைக்காக புலிகளுக்கு சந்திரா சாமி நிதியுதவி செய்துள்ளார். இது தொடர்பானவிசாரணைகள் தொடர்வதால் சந்திரா சாமியை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கூறியது.
இந் நிலையில் இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ வழக்கறிஞர்கள், சந்திரா சாமிக்கு இந்தக் கொலைவழக்கில் தொடர்பிருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. அதை வெளிப்படையாக சொல்ல முடியாது.
நீதிபதியிடம் அதை ரகசியமாகத் தரத் தயார் என்றனர்.
இதையடுத்து வழக்கறிஞர்களை நீதிபதி தனது அறைக்குள் அழைத்துச் சென்றார் நீதிபதி ரவீந்தர் துடேஜா.
அப்போது அவரிடம் சிபிஐ அந்த ரகசிய ஆதாரங்களை சமர்பித்தது. இதனையடுத்து வெளிநாடு செல்ல அனுமதி கோரி சந்திரா சாமிதாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications