For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமி..விபசாரம்..கொடூரம்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

கேரளாவில் இருந்து 14 வயது சிறுமியைக் கடத்தி வந்து நெல்லையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டை போலீஸார் கண்காணித்தனர். இறுதியில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளரைப் போல் உள்ளே போய் மொத்த கும்பலையுைம் வளைத்துப் பிடிக்க உதவினார்.

வீட்டின் உரிமையாளர் ஜமுனா ராணி (40), லட்சுமி (34), கேரள சிறுமி சாந்தூரா (14) உட்பட 5 பெண்களும், தச்சநல்லூரைச் சேர்ந்த கண்ணன் என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டனர்.

கண்ணனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. வாடிக்கையாளர்களிடம் ரூ.500 முதல் 1,000 வரைவசூலித்திருக்கிறார்கள். வெளியூர் அழகி என்றால் ரூ.2,000 மற்றும் அதற்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். வெளியூருக்கு கூட்டிச் செல்ல தனிரேட்.

சாந்தூரா கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருந்து கடத்தி வரப்பட்டவர். இவரை வலுக்கட்டாயமாக பல முக்கிய பிரமுகர்களுக்குவிருந்து படைத்துள்ளனர்.

சாந்தூராவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கேரளாவில் ஒரு வீட்டில் வேலைபார்த்து வந்தபோது, ஒரு ஆணும், பெண்ணும்தன்னை திருநெல்வேலிக்கு கடத்தி வந்ததாகவும், இங்கு லட்சுமி என்ற பெண்ணிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.

இந்த வீட்டிற்கு பாளையங்கோட்டை ஆயுதப்படையைச் சேர்ந்த போலீஸார் சிலர் வந்து உல்லாசம் அனுபவித்து இருக்கின்றனர் என்பதும்போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாந்தூராவைக் கடத்தி வந்தவர்கள் குறித்தும், இந்த வீட்டிற்கு வந்து போன முக்கிய பிரமுகர்கள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X