Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிரடிப்படை கொன்று குவித்த 66 பழங்குடியினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் வேட்டையின் போது அப்பாவி பழங்குடியின மக்கள் 66 பேரை தமிழக மற்றும் கர்நாடகஅதிரடிப்படையினர் கொன்று குவித்ததாக சென்னையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் தமிழ்நாடு சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் கழகம், பெங்களூர் மனித உரிமைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் மனித உரிமை ஆர்வலர்கள், சத்தியமங்கலம் உள்ளிட்ட வீரப்பன் காட்டில் வசித்து வரும் பழங்குடியினமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட சிவனாண்டி என்பவர் கூறுகையில், தமிழகஅதிரடிப்படையினரும், கர்நாடக அதிரடிப்படையினரும் சேர்ந்து நடத்திய வீரப்பன் வேட்டையின்போது பலர்கொல்லப்பட்டனர்.

நான் மட்டும் 66 பேரின் உடல்களை காட்டுப் பகுதியிலிருந்து அகற்றியுள்ளேன். யாராவது சுட்டுக்கொல்லப்பட்டால் என்னைத்தான் அதிரடிப்படையினர் கூப்பிட்டு உடலை அப்புறப்படுத்தக் கூறுவார்கள்.இறந்தவர்கள் அனைவரும் அப்பாவிப் பழங்குடி மக்கள்தான் என்றார்.

வள்ளியம்மாள் என்ற பெண் கூறுகையில், வீரப்பன் எங்கே என்று கேட்டு இரு மாநில அதிரடிப்படையினரும்பெண்களை அதிகம் கொடுமைப்படுத்தியுள்ளனர். எங்களது ஆண்களிடமிருந்து தகவல் பெற வேண்டுமானால்எங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு மானபங்கப்படுத்துவது, கெடுப்பது என்று பாலியல் ரீதியானகொடுமைகளை ஆண்களின் கண் முன்பாகவே செய்வார்கள் என்றார்.

கூட்டத்தின் இறுதியில், தமிழக, கர்நாடக அரசுகள், வீரப்பன் வேட்டையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குஉரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+