அதிரடிப்படை கொன்று குவித்த 66 பழங்குடியினர்!
சென்னை:
வீரப்பன் வேட்டையின் போது அப்பாவி பழங்குடியின மக்கள் 66 பேரை தமிழக மற்றும் கர்நாடகஅதிரடிப்படையினர் கொன்று குவித்ததாக சென்னையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் தமிழ்நாடு சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் கழகம், பெங்களூர் மனித உரிமைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மனித உரிமை ஆர்வலர்கள், சத்தியமங்கலம் உள்ளிட்ட வீரப்பன் காட்டில் வசித்து வரும் பழங்குடியினமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட சிவனாண்டி என்பவர் கூறுகையில், தமிழகஅதிரடிப்படையினரும், கர்நாடக அதிரடிப்படையினரும் சேர்ந்து நடத்திய வீரப்பன் வேட்டையின்போது பலர்கொல்லப்பட்டனர்.
நான் மட்டும் 66 பேரின் உடல்களை காட்டுப் பகுதியிலிருந்து அகற்றியுள்ளேன். யாராவது சுட்டுக்கொல்லப்பட்டால் என்னைத்தான் அதிரடிப்படையினர் கூப்பிட்டு உடலை அப்புறப்படுத்தக் கூறுவார்கள்.இறந்தவர்கள் அனைவரும் அப்பாவிப் பழங்குடி மக்கள்தான் என்றார்.
வள்ளியம்மாள் என்ற பெண் கூறுகையில், வீரப்பன் எங்கே என்று கேட்டு இரு மாநில அதிரடிப்படையினரும்பெண்களை அதிகம் கொடுமைப்படுத்தியுள்ளனர். எங்களது ஆண்களிடமிருந்து தகவல் பெற வேண்டுமானால்எங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு மானபங்கப்படுத்துவது, கெடுப்பது என்று பாலியல் ரீதியானகொடுமைகளை ஆண்களின் கண் முன்பாகவே செய்வார்கள் என்றார்.
கூட்டத்தின் இறுதியில், தமிழக, கர்நாடக அரசுகள், வீரப்பன் வேட்டையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குஉரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications