ஆடிட்டர்: நீதிமன்றத்தில் இரு கத்திகள் ஒப்படைப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை அப்புவின் உத்தரவின் பேரில் கதிரவன் தலைமையிலானகும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. ஜெயேந்திரர் உத்தரவின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ்தரப்பு கூறுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இச் சம்பவம் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் கூலிப் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கத்திகளைபோலீஸார் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
குற்றவாளிகள் பயன்படுத்திய சென்னைப் பதிவு எண் கொண்ட குவாலில் காரும் இன்று காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்திற்குக்கொண்டு வரப்பட்டது. அந்தக் காருக்கு இன்சூரன்ஸ் வழங்கிய அதிகாரியிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications