ஹஜ்: இந்திய புனிதப் பயணிகள் வருகை ஆரம்பம்
ஜெட்டா:
இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்களின் முதல் குழு செளதி அரேபியா வந்து சேர்ந்தது
தமிழகம் மற்றும் ஜம்மூ-காஷ்மீரில் இருந்து சிறப்பு விமானங்களில் கிளம்பிய பயணிகள் நேற்று ஜெட்டா வந்து சேர்ந்தனர்.அவர்களை செளதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் எம்.ஓ..எச். பரூக் விமான நிலையத்தில் வரவேற்றார்.
சென்னை விமான நிலையத்தில் இந்தப் புனித யாத்ரீகர்களை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்வழியனுப்பி வைத்தார். ஹஜ்ஜில் அணியும் வெள்ளை உடையை வழங்கி மாறன் அவர்களை வழியனுப்பினார்.
அவர் பேசுகையில், கடந்த பா.ஜ.க. ஆட்சியில் ஹஜ்சுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்தது. ஆனால், காங்கிரஸ் கூட்டணிஆட்சி வந்த பின் மானியம் முழு அளவில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதே போல அகமதாபாத், ஹைதராபாத், கோழிக்கோடு நகர்களில் இருந்து கிளம்பிய சிறப்பு விமானங்கள் நேற்று மதீனாவைவந்தடைந்தன.
இதில் வந்த பயணிகளை செளதி அரேபியாவுக்கான இந்தியத் துணைத் தூதர் யூசுப் சையீத், இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர்தன்வீர் அகமத் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஹஜ் பயண வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியப் பயணிகள் மதீனா வழியாக செளதிக்குள் நுழைய அந் நாட்டு அரசுஅனுமதி அளித்துள்ளது.
குஜராத், கேரளா, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மட்டும் இந்த ஆண்டு 20,980 பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்தப் பயணிகளுடன் 6 டாக்டர்கள், 6 மருத்துவ சிப்பந்திகள் கொண்ட குழுவும் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications