For Quick Alerts
For Daily Alerts
Just In
தே.ஜ.கூ. எம்பிக்கள் குழுவுக்கு அனுமதி மறுப்பு?
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழுவினருக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவைச் சேர்ந்த 3 எம்.பிக்கள், பிஜூ ஜனதாதளம், சிவசேனா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளஇந்தக் குழுவுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமை வகிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது இந்தக் குழுவை சுஷ்மாசுவராஜ் தலைமை தாங்கி அழைத்து வரப் போவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழுவினர் இன்று சென்னை வந்து நாளை வேலூர் சென்று ஜெயேந்திரரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இக்குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
காஞ்சி மடம் சென்று விஜயேந்திரரை சந்திக்கவும் இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, December 14, 2004, 5:30 [IST]