For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழ. நெடுமாறனிடம் பொடா குழு விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனிடம் பொடா மறு ஆய்வுக் குழு இன்று விசாரணை நடத்தியது.

தமிழக அரசு போட்ட பொடா வழக்குகளை ஆய்வு செய்ய பொடா மறு ஆய்வுக் குழுவினர் ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மெஹ்ராதலைமையில் சென்னை வந்தனர். நேற்று அவர்களது விசாரணை தொடங்கியது.இன்று இந்தக் குழுவின் முன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், அவரது இயக்கத்தைச் சேர்ந்த தாயப்பன்,பாவாணன், ஷாகுல் ஹமீது ஆகியோர் ஆஜராகினர். அவர்களது வழக்கறிஞர்களும் ஆஜராகி குழுவின் முன் தங்களதுவாதங்களை எடுத்து வைத்தனர்.

முன்னதாக நேற்று தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காட்டுப் பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு கைது செய்யப்பட்ட 26நக்சலைட்டுகள் மீது போடப்பட்ட பொடா வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது இந்தக் குழு.

அப்போது இந்த நக்லஸைட்டுகளை தங்கள் முன்பு ஆஜர்படுத்துமாறு அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும் அவர்கள்ஆஜர்படுத்தப்படவில்லை. இந்த 26 பேரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்துரு பேசுகையில், இவர்கள் மீது பொடா வழக்குதொடுக்க எந்தவித முகாந்திரம் இல்லை என்றார்.

பின்னர் 26 நக்சலைட்டுகளையும் இன்று ஆஜர்படுத்துமாறு தமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு மீண்டும் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த நக்ஸல்கள் அனைவரும் இன்று பலத்த பாதுகாப்புடன் குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X