பஞ்சாபில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 34 பேர் பலி
முகேரியான் (பஞ்சாப்):
சண்டீகரில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 34க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும்மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 11 பெண்கள், ஒரு குழந்தையும் அடங்குவர்.
ஆனால், 50 பேர் பலியாகியுள்ளதாகவும் 160க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஸ்யாபூர் மாவட்டத்தில், ஜலந்தரில் இருந்து 40 கி.மீ. தொலையில் இன்று பகலில் இந்த விபத்து நடந்தது.
ஜம்மு தாவி- அகமதாபாத் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஜலந்தர்-பதான்கோட் பாஸஞ்சர் ரயிலும் மன்சர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு ரயில்களிலும் முதல் 3 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. அதில் பயணம் செய்தவர்கள் உடல் நசுங்கிபலியாயினர்.
இரு ரயில்களும் ஒரே பாதையில் எதிரெதிரே பயணிக்க தவறான சிக்னல் தரப்பட்டதால் இந்த விபத்து நடந்தது.
இரு ரயில்களிலும் பயணம் செய்தவர்களில் 50 பேர் வரை பலியாகிவிட்டதாக பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.மேலும் 150 வரை பேர் காயமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இதுவரை 28 உடல்களே மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்துமீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. சம்பவ இடத்துக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications