2வது டெஸ்ட்: டெண்டுல்கருக்கு ஓய்வு?
சிட்டகாங்:
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வுதரப்படும் என்று தெரிகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்டகாங்கில் தொடங்குகிறது. முதல் போட்டியில்இந்தியா வெற்றி பெற்றுவிட்டதால், இரண்டாவது போட்டியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி சச்சினுக்குப் பதிலாக முகம்மது கைப் களமிறங்குவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே கடந்த போட்டியில் 248 ரன்கள் அடித்ததன் மூலம் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டி தர வரிசையில் 12வது இடத்திலிருந்து6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ராகுல் டிராவிட்டும், ஷேவாக் 4வது இடத்திலும் உள்ளனர்.
வங்கதேசம் சவால்:
இதற்கிடையே இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியைத் தருவோம் என்று வங்கதேச கேப்டன் ஹபிபுல் பஷார்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications