ஜெ. திடீர் மைசூர் பயணம்: சாமுண்டீஸ்வரியை தரிசித்தார்
மைசூர்:
கிருஷ்ணகிரி சென்ற முதல்வர் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தரிசனம்செய்தார். அவருடன் சசிகலாவும் சென்றார்.
கிருஷ்ணகிரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்த ஜெயலலிதா அப்படியே ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்றார். லலித்மகால் அரண்மனையில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து காரில் சாமுண்டி மலைக்குச் சென்றார்.
மலை உச்சியில் உள்ள புகழ் பெற்ற சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்கு சசிகலாவுடன் சென்ற ஜெயலலிதாவை கோவில் நிர்வாகிகள் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்றனர்.
கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்ட ஜெயலலிதா, 2 வெள்ளி விளக்குகளையும், ஒரு சேலையையும் கோவிலுககு காணிக்கையாகவழங்கினார்.
கோவில் சார்பாக ஒரு சேலை, அம்மனின் புகைப்படம், பிரசாதம் ஆகியவற்றை கோவில் பூசாரிகள் ஜெயலலிதாவுக்குக் கொடுத்தனர்.
வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில், இது எனது தனிப்பட்ட பயணம். வீரப்பன்கொல்லப்பட்டதற்கு கர்நாடக அதிரடிப்படையின் ஒத்துழைப்பும் தான் காரணம் என்றார்.
இதையடுத்து ஹெலிகாப்டரில் பெங்களூர் வந்த ஜெயலலிதா அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.












Click it and Unblock the Notifications