ரகுவுக்கு விலங்கு ரெடி?
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரின் தம்பி ரகுவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சதிச் செயல்கள், பெண்கள் தொடர்பு, தாக்குதல்கள் சம்பவங்களில் விஜயேந்திரரின் தம்பி ரகுவின் பெயர்அடிபட்டது. இதையடுத்து அவரிடம் காஞ்சிபுரம் போலீஸார் 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் ரகுவின் மேற்பார்வையில் இயங்கி வரும் மாணவியர் விடுதி, பயணியர் விடுதிஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வீடுகளிலும் சோதனை நடந்தது.
விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பல்வேறு கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களைபோலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். சங்கர மட அறக்கட்டளை மூலம்தான் இந்த விடுதிகளுக்கு பணம் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது.
இதுதொடர்பான கணக்குகளை போலீஸார் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.
ரகுவை அப்ரூவர் ஆக்கவும் தீவிர முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யரும், ரகுவும் கைதாகாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் விடாப்பிடியாக சங்கராச்சாரியாருக்கு மீது விசுவாசம் காட்டி வருவதால் போலீஸாரின் முயற்சிகள்இதுவரை பலிக்கவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் ரகு மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரங்களை போலீஸ் தரப்பி திரட்டி விட்டதாகவும்அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே கைது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications