ஜெயேந்திரருக்கு போலீஸ் மனரீதியில் சித்ரவதை
சென்னை:
போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மனரீதியில் தன்னை போலீஸார் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக ஜெயேந்திரர்கூறியுள்ளார்.
தன்னைச் சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழு எம்பிக்களிடம் இந்தத் தகவலை ஜெயேந்திரரர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் தலைவர் பல்பீர்சிங் புஞ்ச் கூறுகையில்,
சிறையில் ஜெயேந்திரரை நாங்கள் சந்தித்தபோது, போலீஸ் காவலில் தான் உடல்ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்றாலும் மனரீதியாகதுன்புறுத்தப்பட்டேன் என்று கூறினார்.
வாகுமூலம் தரவில்லை:
செல்போனில் பலரிடமும் பேசுமாறு தன்னை போலீசார் தூண்டியதாகவும், அதற்குத் தான் மறுத்துவிட்டதாகவும் ஜெயேந்திரர் தெரிவித்தார்.மேலும் குற்றத்தை ஒத்துக் கொண்டு எந்தவித ஒப்புதல் வாக்குமூலமும் தரவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜெயேந்திரர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். எல்லோருக்கும் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கட்டும், உண்மை என்ன என்பது தெரியவரட்டும் என்றும் கூறினார்.
போலீஸ் பீதி:
காஞ்சிபுரத்தில் ஒரு வித பீதியை போலீஸார் கிளப்பியுள்ளனர். மக்கள் பூட்டிய அறைக்குள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். ஜெயேந்திரர்மீது பல வழக்குகளைப் போட்டு குறைந்தபட்சம் ஒரு வழக்கிற்காவது ஆதாரங்களை உருவாக்க முயலுகின்றனர். மடத்தின் நிர்வாகிகளையும்போலீஸார் துன்புறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நேர்மையான விசாரணை நடைபெற வாய்ப்பில்லை. எனவே வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்என்றார் புஞ்ச்.