விமான நிலையத்தில் இறந்த இலங்கை மூதாட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த மூதாட்டி திடீரென்று மரணமடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரோசலின் (வயது 72) என்ற மூதாட்டி விமானத்தில் பயணிப்பதற்காக காத்திருந்தார். அவர் ஏர் சஹாராவிமானம் மூலம் கொழும்பு செல்லவிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு காரணமாக ரோசலின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்கொழும்புவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications