தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம்
சென்னை:
பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கக் கோரி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
தீபா என்ற அந்த மாணவிக்கு இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை தமிழக அரசுமதிக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார் தீபா.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதி கட்ஜூ கூறியதாவது:
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து மாணவிக்கு தமிழக அரசு இடம் தந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலாவது அரசு அப்பீல் செய்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. அரசின் இந்தப் போக்கு சரியல்ல.
நீதிமன்றத்தின் உத்தரவை உடனே நிறைவேற்றினால் தான் அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் மதிக்கும். நீதிமன்றத்தை அரசே மதிக்காவிட்டால்நிர்வாக சீர்கேடு தான் ஏற்படும்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் விட்ட அரசின் செயலை பொறுத்துக் கொள்ள முடியாது. இதை அமைதியாக பார்த்துக் கொண்டும்இருக்க மாட்டோம்.
மாணவி விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார் தலைமை நீதிபதி.