சேது திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்றுதள்ளுபடி செய்தது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.
மத்திய அரசு, இந்தத் திட்டம் நல்ல திட்டம். கடல் வணிக வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் இந்தத் திட்டத்தைதடை செய்யக் கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்தது.
தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவர், மாநில அரசு இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர்கள் இது தொடர்பாகபொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை. எனவே பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தி மத்தியஅரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ, நீதிபதி பாலசுப்பிரமணியன் ஆகியோர் தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் அவர்கள்கூறியிருப்பதாவது:
மனுதாரர் கருத்துக்கு முகாந்திரம் இல்லை. பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்படவில்லை. அது முடியும் முன்பே நீதிமன்றத்திற்குவந்துவிட்டார்கள். இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அடிப்படை உரிமை பாதிப்பதாககூறுவதை ஏற்க முடியாது.
இத் திட்டம் தேசிய நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டம். இதை தடை செய்ய முடியாது. மனுதாரர் அவசரக்கோலத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். சேது சமுத்திரத் திட்டத்தால், இலங்கையை சுற்றி கப்பல்கள் செல்லும் தூரம் குறையும்.
நேரம், எரிபொருள் மிச்சமாகும். வர்த்தகம் பெருகும். வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியும். எனவே தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்பட6 மாவட்ட ஆட்சியர்களும் கருத்துக்கணிப்பு நடத்தி மத்திய அரசுக்கு விரைவாக அறிக்கை அனுப்ப வேண்டும்.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை தடுக்கக்கூடாது. இந்தியா வலுவான நாடாக உருவாகும். இத் திட்டத்தால் ஏழைகள்பாதிக்கப்படமாட்டார்கள். எனவே மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர்.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications