வேலூர் சிறையில் துரைமுருகன் ஏற்படுத்திய பரபரப்பு!
வேலூர்:
சங்கராச்சாரியார் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்கு திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் திடீரென வந்ததால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்திக்க நாடு முழுவதும்இருந்து விஐபிக்கள் வந்து போன வண்ணம் உள்ளனர். இந் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சிறைக்கு வந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஜெயேந்திரரைத்தான் சந்திக்க வந்திருக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது.
துரைமுருகனும் நிருபர்களிடம் ஏதும் பேசிக் கொள்ளாமல் சிறைக்குள் சென்றார். அவருடன் அவரது தம்பி துரைசிங்கமும் சென்றார்.
சிறிது நேரத்தில் துரைமுருகன் வெளியே வந்தார். அப்போது அவரை பத்திரிக்கையாளர்கள் சூழந்து கொண்டனர்.
அப்போது பேசிய துரைமுருகன், திமுகவின் வேலூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். அவர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கத்தான் வந்தேன். இதில் நீங்கள் நினைப்பது மாதிரி வேறு விசேஷம் இல்லை என்று கூறி விட்டுச்சென்றார்.
இதையடுத்து நிருபர்களிடம் எழுந்த எதிர்பார்ப்பு சட்டென்று புஸ்வானம் ஆகிப் போனது.












Click it and Unblock the Notifications