பிகார், ஹரியானா, ஜார்க்கண்ட்: பிப்ரவரியில் தேர்தல்
டெல்லி:
பிகார், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிகாரில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடக்கும். ஹரியானாவில் பிப்ரவரி 3-ம் தேதி தேர்தல் நடைபெறும். அதே நாளில் பிகார், ஜார்க்கண்ட்மாநிலங்களில் சில மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறும். இம் மாநிலங்களில் அடுத்த இரு கட்ட தேர்தல்கள் பிப்ரவரி 15 மற்றும் 23ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இம் மூன்று மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மூன்று மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படும்.
வாக்குச் சாவடிகளுக்குள் பத்திரிகையாளர்களின் காமிரா, விடியோ பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.
வன்முறை, கலவரம், கள்ள ஓட்டு, கொலை, வேட்பாளர் கடத்தல் என அனைத்து வகையான ரெளடித்தனத்துக்கும் பேர் போன பிகாரில்ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மத்திய பார்வையாளரை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications