For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரர் நியூஸ்: வெளியிட தடை கோரி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jeyendrar நக்கீரன் உள்ளிட்ட 5 பத்திரிக்கைகள் மற்றும் விஜய் டிவி ஆகியவை, ஜெயேந்திரர் குறித்த செய்திகளை எழுத, படங்களைப் பிரசுரிக்கத்தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவ நரசிம்மன் என்ற சங்கர மட பக்தர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

தனது மனுவில், நக்கீரன், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், நெற்றிக்கண், தினகரன் நாளிதழ் ஆகிய பத்திரிக்கைகளும், விஜய் டிவியும்புலனாய்வு செய்திகள் என்ற பெயரில் ஜெயேந்திரருக்கு எதிரான, துவேஷமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சங்கர மடத்தையும், ஜெயேந்திரரின் புகழையும் குலைக்கும் விதமாக இவற்றின் செய்திகள், புகைப்படங்கள் அமைந்துள்ளன.சங்கராச்சாரியார் பெண்களுடன் தவறான உறவு வைத்திருப்பது போலவும், சங்கர மட சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்துவதுபோலவும் இவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்தச் செய்திகளால் ஜெயேந்திரர் பெயரும், சங்கர மடத்தின் பெயரும் கேவலப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த பத்திரிக்கைகள் மற்றும் விஜய் டிவி ஆகியோர் ஜெயேந்திரர் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்க, ஒளிபரப்ப தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X