தப்பியோடி மாட்டிய 2 கைதிகள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மத்திய சிறையிலிருந்து குழாய் மூலம் மேலே ஏறி தப்பிய 2 கைதிகள் அடுத்த சில மணி நேரங்களில் பிடிபட்டனர்.

பண்ருட்டியைச் சேர்ந்த வேல்முருகன், மயிலாடுதுறையைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பலத்த காவல் உள்ள இந்தச் சிறையிலிருந்து இன்று அதிகாலை இருவரும் தப்பித்தனர். சிறைக்குள் உள்ள குழாய் மூலம் மேலே ஏறிவெளியேறிக் குதித்தனர்.

தப்பும்போது பாண்டியன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கால் முறிந்து போனது. இதனால் ஓட முடியாமல் சிறைக்குஅருகிலேயே ஒரு இடத்தில் அவர் பதுங்கியிருந்தார். இதனால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.

அதேபோல, மற்றொரு கைதியான வேல்முருகனை பண்ருட்டியில் வைத்து போலீஸ் படை பிடித்துவிட்டது. இருவர் மீதும் தப்பியோடமுயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+