ராமதாசுக்கு ராமகோபாலன் கேள்வி
விழுப்புரம்:
இந்துக்களின் பெயரை மாற்றி தமிழில் பெயர் சூட்டும் பாமக தலைவர் ராமதாஸ், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களது பெயர்களைமாற்றாதது ஏன் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கேட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த இந்து மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்துக்களின் பெயரை மாற்றி, தமிழில் பெயர் சூட்டுவதை ராமதாஸ் தொடர்ந்து செய்கிறார். இதைப்போல, இஸ்லாமியர் மற்றும்கிறிஸ்தவர்களின் பெயர்களை மாற்றிவிட்டு, தமிழில் பெயர் சூட்ட ராமதாஸ் முன் வர வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் மீது பாகிஸ்தான் குறி வைத்துள்ளது. அணுசக்தி மூலப்பொருள்கள் இங்கு அதிகம் கிடைப்பதால், பாகிஸ்தான்இப்பகுதியை குறி வைத்திருக்கிறது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தால் பாகிஸ்தான் படைகள்தூத்துக்குடியைத்தான் முதலில் தாக்கும்.
அடுத்த தேர்தலுக்கு முன்பாக இந்து வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும். இந்து முன்னணி தேர்தலில் நிற்காவிட்டாலும் எந்தவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை அடையாளம் காட்டும் என்று பேசினார்.