இந்திய உறவு: பலப்படுத்த மலேசியா விருப்பம்
டெல்லி:
இந்தியாவுடனான இரு தரப்பு உறவை பலப்படுத்த விரும்புவதாக மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது பதாவி கூறினார்.
பதாவி 5 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய பதாவி,
இந்தியாவுடன் அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவை பலப்படுத்தவும், விரிவுபடுத்தவும் மலேசியா விரும்புகிறது. அதற்கு எனதுஇந்தப் பயணம் துணை புரியும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் மலேசிய பிரதமராகப் பதவியேற்ற பின்பு பதாவி முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருடன்மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சையீத் ஹமீத் அல்பர், தொழில்துறை அமைச்சர் சாமிவேலு உள்ளிட்ட உயர் நிலைக் குழுவும்வந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை பதாவி சந்தித்துப் பேசவிருக்கிறார்.
அப்போது இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதிக்க இருக்கிறார்கள். குறிப்பாக தீவிரவாதஅச்சுறுத்தல், ஐநா சபையை மாற்றியமைப்பது மற்றும் இராக் பிரச்சனை குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்,உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர்ஆகியோரை பதாவி சந்தித்துப் பேசுகிறார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications