அப்புவுக்காக தயாராகும் சென்னை, திருச்சி சிறைகள்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அப்பு வரும் 23ம் தேதி சென்னைசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளான்.
சங்கரராமன் கொலை வழக்குத் தவிர 2 ஆண்டுகளுக்கு முன் மந்தைவெளி பகுதியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் வழக்கிலும் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கிலும் கூலிப் படையை அனுப்பிய முக்கிய குற்றவாளியாக அப்பு சேர்க்கப்பட்டுள்ளான். இந்த வழக்கு விசாரணைசைதாப்பேட்டை 23வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அப்புவை வரும் வரும் 23ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அன்று தான்சங்கரராமன் கொலை வழக்கில் அப்புவின் போலீஸ் காவல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
இந் நிலையில் ஆடிட்டர் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் சில நாட்கள் அப்புவை தங்களது கஸ்டடியில் எடுக்க போலீசார்திட்டமிட்டுள்ளனர்.
மேலும் போலீஸ் காவல் எல்லாம் முடிந்த பின் அப்புவை வேலூர் சிறைக்குப் பதில் சென்னை மத்திய சிறை அல்லது திருச்சி, கடலூர்சிறைகளில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். காஞ்சிக்கு அருகில் உள்ள சென்னை சிறையில் தான் அவன் பெரும்பாலும்அடைக்கப்படுவான் என்று தெரிகிறது.
வருடத்துக்கு ரூ. 4 லட்சம் வரை இன்கம்டாக்ஸ் கட்டும் நபர் என்பதால் சிறையில் அப்புவுக்கு முதல் வகுப்பு தரப்படும் என்று தெரிகிறது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications