ஆடிட்டர்: ஜாமீன் மனு விசாரணை டிச-23க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 23ம்தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
இன்று நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துல்சி, இந்தமனுவுக்கு பதில் தாக்கல் செய்ய வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என்றார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்திய தண்டனைச் சட்டம் 307வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஜெயேந்திரரை இத்தனைநாட்கள் சிறையில் வைப்பதே நியாயமற்றது என்றார்.
இதையடுத்து விசாரணையை 23ம் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்த நீதிபதி அதற்குள் பதில் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்குஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications