போலீஸ் தொல்லை ஓயல: முத்துலட்சுமி
சேலம்:வீரப்பன் கொல்லப்பட்ட பின்னரும் தனக்கு போலீஸ் தொல்லை தொடர்வதாக அவனது மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
என் கணவர் கொல்லப்பட்டதில் பல மர்மங்கள் உள்ளன. அவரது உடலில் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இதற்காக உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறேன். விரைவில் இந்தக் கோரிக்கை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ்ஆகியோரை சந்தித்துப் பேசுவேன்.
அதே போல காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் மூலம் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் முறையிடஉள்ளேன்.
என் கணவர் கொல்லப்பட்ட பின்னரும் போலீசாரால் எனக்கு தொல்லை ஓயவில்லை. மாறு வேடத்தில் போலீசார் என்னை தொடர்ந்துகொண்டுள்ளனர். இது மன உளைச்சலைத் தருகிறது.
கணவரை இழந்த எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும். தமிழகத்திலும் கர்நாடகத்திலும் எங்கள் மீது போட்ட எல்லா வழக்குகளையும்வாபஸ் பெற வேண்டும் என்றார் முத்துலட்சுமி.












Click it and Unblock the Notifications