தமிழர்களின் பாரம்பரிய பானம் கள்: ராமதாஸ்
சென்னை:
சேலம் மாவட்டத்தில் நாடார்கள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாடார் பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியாக போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் சேலம் மாவட்டத்தில்அவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டி ருக்கிறது.
இது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படவேண்டும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைப் போல இங்கேயும் கள் விற்க அனுமதிக்க வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள்கோரி வருகிறார்கள். அதிமுக அரசு இந்த பிரச்சினையில் அண்டை மாநிலங்களை பின்பற்றுவதில் என்ன சிரமம் இருக்கிறது என்பதுதெரியவில்லை.
அரசாங்கமே சாராயம் விற்றால், எங்கிருந்து வரும் கள்ளச் சாராயம்? என்பது இந்த அரசின் நவீன மதுவிலக்கு கொள்கைப் பிரசாரம்.சாராயத்தை விட கள் விற்பனையை அனுமதிக்கலாம். அது தமிழர்களின் பாரம்பரிய பானம். அதில் போதை உண்டு. ஆனால் அழிவில்லை.
கள் இறக்கவும், விற்கவும் அனுமதித்தால் கிராமப்புற வேலை வாய்ப்புகள் பெருகும்.
அண்மையில் விஸ்கி, பிராந்தி போன்ற சீமைச் சாராய வகைகளின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வால்மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் சாராய ஆலை அதிபர்களுக்கு கூடுதல் லாபமாக கிடைக்கப்போகிறது.
தமிழகத்தில் கணிசமாக வாழும் பனைமரத் தொழிலாளர்களும், தென்னை, பனை பயிரிடும் லட்சக்கணக் கான விவசாயிகளும் பயன்அடையும் வகையில் கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு ஏன் சிந்திக்கவில்லை?
அனைத்து சாராய கடைகளையும் மூடிவிட்டு அங்கே பதநீர் உள்ளிட்ட பனைப் பொருட்களின் விற்பனையை அரசு தொடங்கினால் தமிழகமக்கள் பயன்பெறுவார்களே? இதை அரசு ஏன் சிந்திக்கக்கூடாது? என்று கூறினார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு, மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் சேதுராமன்ஆகியோரும் நாடார்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications