லாரி-கார் மோதல்: 4 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே இன்று அதிகாலை லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் 4 பேர் சம்பவ இடத்திலேயேபலியானார்கள். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த பிரேம் (27), கரண்(25), ஜெய்தீப், பிரசாந்த், போச் ஆகிய 5 பேரும் கேரளா மாநிலம் கோட்டயத்தில் தங்களதுநண்பனின் தங்கை திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குவாலிஸ் காரில் புறப்பட்டு சென்றனர். காரை டிரைவர் மஞ்சுநாத்ஓட்டிச் சென்றார்.
இன்று காலை 4.45 மணிக்கு சேலம் சின்னசீரகாப்பாடி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, சங்ககிரியில் இருந்து வெள்ளைக்கல் பாரம்ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியுடன் நேருக்கு நேர மோதியது.
இதில் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பிரேம், கரண், ஜெய்தீப், மஞ்சுநாத் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயேபலியானார்கள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரசாந்த், போச் ஆகியோர் சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குதீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications