சுந்தரசே அய்யர் கைது: ஜனவரி 7 வரை சிறை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலையாளிகளுக்கு பல தவணைகளில் ரூ. 55 லட்சம் வரை கொடுத்ததாக சங்கர மட மேலாளர்சுந்தரேச அய்யர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜனவரி 7ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஜெயேந்திரர், அப்பு உள்ளிட்டவர்களை விட அதிகஅளவில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டவர் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர்தான். இதுவரை 13 முறை அவர்தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டார்.
சங்கர மடத்தின் சகல விவரங்களும் தெரிந்தவர் சுந்தரேச அய்யர். சங்கராச்சாரியாருக்கு ரொம்ப நெருக்கம்.இதனால் சங்கரராமனைப் போட்டுத் தள்ள போடப்பட்ட சதி, கொலையாளிகளுக்குப் பணம் போன விவரம்ஆகியவை அய்யருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று போலீசார் நம்பினர்.
இதனால் தான் அவரை வாரம் முழுவதும் வரவழைத்து விசாரித்தனர். ஆனால், ஒழுங்காக பதில் சொல்லாமல்மழுப்பியே வந்தார்.
இதையடுத்து 5 வங்கிகளின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது மடத்தின் பல்வேறுடிரஸ்ட்களின் கணக்குகளில் இருந்து சங்கரராாமன் கொலைக்கு முன்பும் பின்பும் பல தவணைகளாக வங்கிகளில்இருந்து ரூ. 55 லட்சம் வரை எடுக்கப்பட்டது உறுதியானது.
இந்த ஆதாரங்களை அய்யர் முன் வைத்த அதிகாரிகள் கேள்விகள் கேட்டபோது மென்று முழுங்க ஆரம்பித்தார்சுந்தரசே அய்யர்.
இந் நிலையில் நேற்று மாலையும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். வழக்கம் போல நடக்கும்விசாரணைதானே என்று அய்யரும் வழக்கம் போல காட்டு பங்களாவிற்கு கையில் வாட்டர் பாட்டிலுடன் வந்தார்.ஆனால், வழக்கத்தைவிட கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது.
வெள்ளிக்கிழமை மாலையில் போலீசார் இப்படி அய்யரை நீண்ட நேரம் விசாரித்தபோதே ஏதோ நடக்கப்போவதை நிருபர்களால் யூகிக்க முடிந்தது.
இந் நிலையில் இரவு 9.30 மணிவாக்கில் சங்கர மடத்தின் வழக்கறிஞர் கே.எஸ்.செல்லப்பா காட்டுப்பங்களாவிற்குள்ளிருந்து வெளியே வந்தார். விசாரணை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது,
மாலையில் விசாரணைக்கு அழைத்த போலீஸார் தற்போது சுந்தரேச அய்யரைக் கைது செய்துள்ளதாகதெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் மீது என்ன பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளதோ அதேபிரிவுகள்தான் சுந்தரேச அய்யர் மீதும் போடப்பட்டுள்ளன (அதாவது கொலை வழக்கு).
கூடுதலாக, கூலிப் படையினருக்கு ரூ. 55 லட்சம் வரை கொடுத்ததாக சுந்தரேச அய்யர் மீது புகார்சுமத்தப்பட்டுள்ளது செல்லப்பா.
கைது செய்யப்பட்ட அய்யர் காட்டு பங்களாவில் ஒரு அறையிலேயே நேற்றிரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டார்.இரவு முழுவதும் அவரிடம் ஜெயேந்திரர் குறித்து விசாரணை நடந்தது.
தன்னை போலீசார் கைது செய்துவிட்டதையடுத்து பல உண்மைகளை அய்யர் போட்டு உடைத்துவிட்டதாகத்தெரிகிறது. கொலை குறித்து அய்யருக்கு எல்லா விவரமும் தெரியும் என்கிறது போலீஸ்.
அவர் மீது கொலை வழக்கு (பிரிவு 302), கிரிமினல் சதித் திட்டம் (120 பி), கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டது(பிரிவு 34) ஆகிய மூன்று பிரிவுகளின் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இன்று அய்யர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஜனவரி 7 வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையில் அடைக்கப்படும் அய்யரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்வார்கள் என்றுதெரிகிறது.
இதுவரை இந்த வழக்கில் ஜெயேந்திரரின் ஆரம்பித்து அப்பு வழியாக சுந்தரேச அய்யர் வரை 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அடுத்து இந்தப் பட்டியலில் சேர இருப்பது ரவி சுப்பிரமணியமும் அவரைத் தொடர்ந்து ரகுவும் என்கிறார்கள்.பட்டியல் அத்தோடு முடியாது என்றும் தெரிகிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications