மீனம்பாக்கத்தில் ஏர் டெக்கான் அலுவலகம் சூறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டெல்லி செல்லவிருந்த தனியார் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வன்முறையில்இறங்கினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக டெல்லிக்கு இன்று காலை 5.30 மணிக்கு ஏர்-டெக்கான் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்செல்லவிருந்தது. ஆனால் இந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று நள்ளிரவுக்கு மேல்வெளியிடப்பட்டது.

ஆனால், விமானம் ரத்தானது தெரியாமல் 140 பயணிகள் இன்று காலை விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர். விமானம் ரத்தானதகவலை முறையாகத் தெரிவிக்காதது ஏன் என்று கேட்டவாறு ஏர் டெக்கான் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உடனே தங்களுக்கு மாற்று விமானத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரினர். அதற்கு ஏர் டெக்கான் நிறுவன ஊழியர்கள் முறையாக பதில்சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகளில் பலர் வன்முறையில் இறங்கினர்.

ஏர் டெக்கான் அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்து எறிந்த பயணிகள், அங்கிருந்த தொலைபேசி சாதனங்களையும் வீசி எறிந்தனர்.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏர் டெக்கான் நிறுவனத்தின் அலுவலகம் பயணிகளால் சூறையாடப்படுவது இது இரண்டாவதுமுறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+