சுந்தரேச அய்யர் சென்னை சிறையில் அடைப்பு
சென்னை:
சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப் படையினருக்கு ரூ. 55 லட்சம் பணத்தை விநியோகித்ததாக சுந்தரேசன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.அத்தோடு அவர் மீது கொலை, கொலைச் சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜனவரி 7ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சுந்தரேச அய்யர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நீதிபதி உத்தரமாஜிடம், தன்னை வேலூர் சிறையில் அடைக்குமாறு (அங்குதான் ஜெயேந்திரர் அடைக்கப்பட்டுள்ளார்) சுந்தரேசஅய்யர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். சென்னை மத்திய சிறையில் அய்யரை அடைக்கபோலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications