மீண்டும் கொந்தளிப்பு ஏற்படும்: வானிலை இலாகா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Chennaiசென்னை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் 10 மீட்டர் உயரத்திலான ராட்சத அலைகளுடன் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படும்என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. கடலோரப் பகுதி மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்லுமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக சென்னை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிகப் பெரியகடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இந் நிலையில் மீண்டும் ராட்சத அலைகளுடன் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. இந்தகடல் அலைகள் 10 மீட்டர் உயரத்திற்கு இருக்கும் என்றும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே கடலோரப் பகுதிகளில்இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரத்தில், மீண்டும் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இன்றிரவு அல்லது நாளை மீண்டும் நிலநடுக்கம் என்று ஒரு வதந்தி பரவியது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.

இந் நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவர் அதனை மறுத்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர்கூறியதாவது:

சென்னையில் இன்று காலை ஏற்பட்டது நில அதிர்வுதான். நில நடுக்கம் அல்ல. இந்தோனேஷியாவில்தான் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன்தாக்கம்தான் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் எதிரொலித்தது.

எங்களுக்குக் கிடைத்த தகவல்படி மீண்டும் நில அதிர்வு வர வாய்ப்பில்லை. எனவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+