மேடான பகுதிகளுக்கு சென்றுவிட கோரிக்கை!
சென்னை:
சென்னை நகரின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான, மேடான பகுதிகளுக்குச் சென்றுவிடுமாறுமாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் கடலோரப் பகுதிகளான பட்டினப்பாக்கம், மயிலாப்பூர்,நைனார் குப்பம், நொச்சிக்குப்பம், திருவான்மியூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் மேடான,பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடல் கொந்தளிப்பு தொடர்ந்து சில நிாட்கள் இருக்கும் என கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபொதுமக்கள் இதை தயவு செய்து உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
செனனை நகரில் கடல் கொந்தளிப்புக்கு ஆளான பல கடலோரப் பகுதிகளில் வசிப்போரில் பலர் இன்னமும்தொடர்ந்து அந்தப் பகுதிகளிலேயே நடமாடுவதால் மாநகராட்சி சார்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications