For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரகு கைது: சென்னை சிறையில் அடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Raghuசங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் தம்பி ரகு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை ஜனவரி 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் உத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்துரகு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரையும் சேர்த்து சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ரகுவிடம் போலீசார் பல முறை விசாரணை நடத்தினர். ஆனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சங்கர மடத்தின்மருத்துவமனையில் சேர்ந்த ரகு, தனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த அப்பன்டிசைடிஸ் பிரச்சனைக்காக குடல் வால் நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.

இதனால் இவரது கைது தள்ளிப் போனது. இந் நிலையில் அப்புவும் ரவி சுப்பிரமணியமும் போலீசாரிடம் மாட்டிக் கொள்ள, அவர்கள் தந்தவாக்குமூலத்தில் இந்தக் கொலையில் ரகுவின் பங்கு குறித்து விரிவாகத் தெரியவந்தது.

கொலைக்கு பண ஏற்பாட்டைச் செய்தது, பண பட்டுவாடாவை முன்னின்று செய்தது எல்லாம் ரகு தான் என்று உறுதியானது. இதையடுத்துநேற்றும் ரகுவை விசாரணைக்கு வரவழைத்த போலீசார், சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு இரவில் கைது செய்தனர்.

அப்போது ரகுவின் அண்ணனும் இளையவரின் இன்னொரு சகோதரருமான பிரபாகரும் உடனிருந்தார்.

கூலிப் படைக்கு பண பட்டுவாடா செய்ததாக ரகு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது பாலியல் வழக்குகளும்பாயக் கூடும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X