For Daily Alerts
Just In
அந்தமான்: ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல்
போர்ட்பிளேர்:
மேலும் விமானியில்லாமல் பறக்கும் விமானங்களைக் கொண்டும் தீவுக் கூட்டங்களில் உடல்களைத் தேடும் பணியில் இந்திய ராணுவமும்விமானப் படையும் ஈடுபட்டுள்ளன.
உடல்களை மீட்டு புதைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதே நேரத்தில் காயமடைந்தவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம்சென்னை, கொல்கத்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சுனாமியால் தாக்கப்பட்ட நாடுகளுக்கு 500 மில்லியன் டாலர் உதவி வழங்க 30 நாடுகளும் உலக வங்கியும் முன்வந்துள்ளன. இத் தகவலை ஐநா பொதுச் செயலாளர் கோபி அன்னான் தெரிவித்தார்.
இதில் உலக வங்கி மட்டும் 250 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.
Comments
Story first published: Friday, December 31, 2004, 5:30 [IST]