நிதி திரட்ட 2 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்
கொல்கத்தா:
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பொருட்டு, ஆசிய லெவன்-, ஐ.சி.சி. லெவன் அணிகளுக்குஇடையே 2 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கி உள்ளது. அதேபோல்இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்களும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
இந் நிலையில் மேலும் நிதி திரட்ட 2 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தை சேர்ந்த முன்னணி வீரர்கள் ஒரு அணியாகவும், பிற நாடுகளின் வீரர்கள் மற்றொரு அணியாகவும் பிரிக்கப்பட்டுஉள்ளன. இதில் விளையாட நட்சத்திர வீரர்களான டெண்டுல்கர், லாரா, ரிக்கி பாண்டிங், வார்னே, மெக்ரத் உள்ளிட்டோர் சம்மதம்தெரிவித்துள்ளனர்.
முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் வருகிற 10ம் தேதி நடக்கிறது. 2-வது போட்டி நடக்கும் தேதிமற்றும் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications