ஆலடி அருணா: சரண்டரான போலி!
சென்னை& நெல்லை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் ஒருவர்சரணடைந்துள்ளார். ஆனால், இவன் உண்மையான குற்றவாளி இல்லை என்று நெல்லை காவல்துறையினர் கூறுகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த ஆலடி அருணா கடந்த டிசம்பர் 31ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப்போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுவரை 25 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
இந் நிலையில் அருணா கொலை வழக்கில் தன்னை போலீசார் தேடுவதாகக் கூறி நெல்லையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னைதிருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை 7 நாள் சிறைக்காவலில் வைக்க நீதிபதி லட்சுமிகாந்தன்உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பாலமுருகன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், பாலமுருகனை தாங்கள் தேடவே இல்லை என்றும், உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைக்க இவன் போலியாகசரணடைந்துள்ளதாகவும் நெல்லை போலீஸார் கூறுகின்றனர்.
ஆலடி அருணா கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் பட்டியலில் பாலமுருகனின் பெயர் இல்லை என்றும், கொலை நடந்த இடத்தில்கைப்பற்றப்பட்ட செல்போன் பாலமுருகனுக்கு சொந்தமானதல்ல என்றும் நெல்லை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலமுருகனை சரணடைய வைத்தது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கிலும் இப்படித்தான் முதலில் போலி குற்றவாளிகள் சரணடைந்தனர். அதைத் தொடர்ந்துஉண்மையான குற்றவாளிகளைப் போலீஸார் வளைத்துப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications