சென்னையில் இன்று மீண்டும் நில அதிர்வு
சென்னை:
![]() |
சென்னையில் இன்று பல இடங்களில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. பகல் 2.37 மணியளவில் இந்த அதிர்வை உணர முடிந்தது.
இதையடுத்து பல இடங்களில் மக்கள் வீடுகளையும் அலுவலங்களையும் விட்டு வெளியே ஓடினர்.
கடந்த மாதம் 26ம் தேதி சுமத்ரா அருகே ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தின் தொடர்ச்சியாக லிட்டில் அந்தமானுக்கு மேற்கே இன்று கடலில்ஏற்பட்ட நில அதிர்ச்சி காரணமாகவே சென்னையிலும் லேசான நில அதிர்வு (ஆஃப்டர் ஷாக்) ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
கடந்த 26ம் தேதி காலையில் நில நடுக்கம் ஏற்பட்ட அடுத்த 2 மணி நேரத்தில் தான் சுனாமி அலை தாக்கியது. இதையடுத்து கடந்த 28ம்தேதியும் இதே போன்ற நில அதிர்வு ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து சுனாமி அலைகள் வருமோ என்ற பயத்தில் கடலோரப் பகுதிகளில் உள்ளதங்களது உறவினர்கள், நண்பர்களையும் தொலைபேசிகளிலும் செல்போன்களில் அவசரமாகத் தொடர்பு கொண்டு அங்கிருந்து அகலும்படிபலரும் அறிவுறுத்தியதைப் பார்க்க முடிந்தது.
ஆனால், இது வெறும் ஆப்டர் ஷாக் தான் எனவும், சுனாமி அலையெல்லாம் வராது என்றும் வானிலை ஆய்வு மையம்தெளிவுபடுத்தியுள்ளது.
இன்று லிட்டில் அந்தமான் அருகே கடலில் ஏற்பட்ட இந்த நில அதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது.













Click it and Unblock the Notifications