ஜெ. வீடு முன் போராட்டம்: மீனவர்கள் எச்சரிக்கை
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால் கட்டு மரத்துடன் முதல்வர்ஜெயலலிதா வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுக்கு அரசின் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று கூறி சென்னை மீனவர்கள் சனிக்கிழமை சென்னைசாந்தோம் பகுதியில் போராட்டம் நடத்தினர், பஸ்களையும் சிறை பிடித்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்தமாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணுச்சாமி அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
இந் நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சாந்தோம் அருகில் உள்ள அகிலஇந்திய வானொலி அலுவலகம் முன் திரண்டனர்.
இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை துணைஆணையர் சண்முகராஜேஸ்வரன் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.
மீனவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் எச்சரித்தனர். ஆனால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரைபோக மாட்டோம் என்று மீனவர்கள் கூறி விட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு 8 நாட்களாகியும் எங்களுக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை. அளிக்கவில்லை,தனியார் தொண்டு நிறுவனங்கள்தான் உதவி வருகின்றன. எங்களுக்குரிய நிவாரண உதவிகளை அரசு உடனடியாகவழங்க வேண்டும்.
அதுவரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம். இன்று மாலை 5 மணிக்குள் எங்களுக்கு அரசு சார்பிலான உதவிகள்அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் ஜெயலலிதா வீடு முன் கட்டுமரத்துடன் போராட்டம்நடத்துவோம் என்று மீனவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்தார் ஆட்சித் தலைவர் கண்ணுச்சாமி.
இன்று மாலை 3 மணிக்கு மேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். நாளைக்குள் அனைவருக்கும்நிவாரண உதவிகளை அதிகாரிகள் வழங்கிடுவர்.
தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் உங்களுக்கும் கிடைக்கும்.
இதில் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. அப்படிக் கூறப்படும் தகவல்களை மீனவர்கள் நம்ப வேண்டாம் என்றார்.இதையடுத்து மீனவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.













Click it and Unblock the Notifications