அந்தமான் ஆழ்கடல் பகுதியில் கடற்படை கப்பல் ஆய்வு
போர்ட்பிளேர்:
![]() |
சுமத்ராவில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பம் காரணமாக அந்தமானை ஒட்டிய இந்திய கடல் பகுதிக்குள் ஏதாவது பெரும் மாற்றங்கள்ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய நவீன கருவிகள் கொண்ட இந்திய கடற்படைக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் தர்ஷக் என்ற இந்தக் கப்பல் இந்தியக் கடல் பகுதியின் அடித்தட்டு மற்றும் தரைப் பகுதி குறித்து ஆய்வு நடத்தும்.
கடலின் ஆழத்தில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டுள்ளதா, கடல் நீரோட்டங்களின் திசை மாறியுள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் நடக்கும். இருமாதங்களுக்கு முன்பு தான் இந்தப் பகுதியில் இதே கப்பல் ஆய்வு நடத்திவிட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகட்ட கடற்படையின் ஆய்வின்படி சுமத்ராவில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்துக்குப் பின் அந்தமான் பகுதியின்கடலடி நீரோட்டத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் அந்தமானுக்கு எந்தவிதமான சேதம் ஏற்படும் என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
அதே போல இந்திய சர்வேதுறையும் அந்தமானில் ஏற்பட்டுள்ள நில மாறுதல்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காகடோபோகிராபி நிபுணர்கள் கொண்ட குழு 10ம் தேதி அந்தமான் செல்கிறது.
இந்திய செயற்கைக் கோள்கள் எடுத்துள்ள படங்களின் மூலம் அந்தமானின் கரைப் பகுதிகள் கடலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தீவுக் கூட்டங்களே ஒரு பக்கமாக சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதை ஆய்வுசெய்யவே சர்வேத்துறை அங்கு விரைகிறது.













Click it and Unblock the Notifications