For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா, இலங்கைக்கு 2 லட்சம் கலாரா வாக்சீன்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்:

Nagai Lighthouse

தமிழகம், அந்தமான், இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளில் காலரா நோய் தடுப்புக்காக 2 லட்சம் வாக்சீன் குப்பிகளை ஸ்வீடன் அரசுஅனுப்பி வைக்கிறது.

சுனாமி தாக்குதலையடுத்து மாபெரும் சுகாரதக் கேடும், கெட்டுப் போன உடல்களால் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் காலரா பரவும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க டுகோரல் எனப்படும் குடிக்கத் தக்க வாக்சீன் குப்பிகளை ஸ்வீடன் அரசு அனுப்புகிறது. உலகிலேயே ஸ்வீடனிடம் மட்டுமேவாயால் உட்கொள்ளும் காலரா தடுப்பு வாக்சீன்கள் பெருமளவில் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்சீன்களை வழங்குமாறு ஐநா சபையும், உலக சுகாதார அமைப்பும் கோரிக்கை விடுத்ததை உடனே ஸ்வீடன் ஏற்றுக்கொண்டுள்ளது. உடனடியாக 2 லட்சம் குப்பிகளை வழங்க முன் வந்துள்ளது.

இவை 10 நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைச் சென்றடையும்.

வெளிநாட்டு என்ஜிஓக்களுக்குத் தடை:

இதற்கிடையே இந்தியாவில் நிவாரணப் பணிகளில் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசுகூறியுள்ளது. வெளிநாட்டு நிதியுதவியையும் நிவாரண உதவியையும் மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சுனாமி பாதித்த பகுதிகளில் குறிப்பாக ராணுவ முக்கியத்துவம் வாயந்த அந்தமானில் வெளிநாட்டு அமைப்புகள் எந்தநிவாரணப் பணியில் ஈடுபட அனுமதிக்கப்படாது என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நாகையில் பிரெஞ்ச் மருத்துவக் குழு:

இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிலிருந்து 15 பேர் கொண்ட மருத்துவக் குழு நாகை வந்துள்ளது.

டாக்டர் உல்ப் என்பவர் தலைமையில் வந்துள்ள இந்தக் குழுவில், 6 டாக்டர்கள், 6 செவிலியர்கள் இடம் பெற்றுள்ளனர். இக் குழுவினர்தொற்று நோய் தடுப்பு மருந்துகளுடன் வந்துள்ளனர். மொத்தம் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இக்குழுவினர் கொண்டுவந்துள்ளனர்.

இவர்கள் நாகை மாவட்டத்தில் 5,000 பேருக்கு இவர்கள் தொற்று நோய்த் தடுப்பு சிகிச்சை அளிக்கவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X