பிரதமரிடம் குவிந்த ரூ. 308 கோடி நிவாரண நிதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Laloo gives the cheque to Manmohan singh

சுனாமியால் தாக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் வழங்க தமிழக முதல்வரின் நிதிக்கும் பிரதமரின் நிவாரண நிதிக்கும் ஏராளமானபணம் குவிந்து வருகிறது.

பிரதமரின் நிவாரண நிதியில் கடந்த ஒருவாரத்தில் ரூ. 308 கோடி குவிந்துள்ளது. தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலும் சுமார் ரூ. 37 கோடிவரை உதவித் தொகை சேர்ந்துள்ளது.

நேற்று கர்நாடக அரசு ரூ. 20 கோடியை பிரதமரிடம் வழங்கியது, ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தனது துறையின்சார்பில் ரூ. 10 கோடியையும், அவரது மனைவியும் பிகார் முதல்வருமான ராப்ரி தேவி மாநிலத்தின் சார்பில் ரூ. 10 கோடியும் வழங்கினார்.

Daram singh gives the cheque to Manmohan singh

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 5 கோடி, நால்கோ நிறுவனம் ரூ. 2 கோடி, கோக் நிறுவனம் ரூ. 2 கேடிை, முருகப்பா குழுமம், கன்கார், எச்டிஎப்சி,தேனா வங்கி, டிஏவி மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் தலா ரூ. 1 கோடி வழங்கின.

நடிகர் ஷாருக் கான் ரூ. 25 லட்சம், ராணி முகர்ஜி ரூ. 25 லட்சம், இயக்குனர் கரன் ஜோகர் ரூ. 25 லட்சம் வழங்கினர்.

பள்ளி மாணவன் ரூ. 500:

சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் தனது சேமிப்பான ரூ. 500யை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளான்.

இதைத் தவிர தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பத்திரிக்கைகள், டிவிக்கள் ஆகியவையும் நிவாரண நிதி திரட்டி வருகின்றன. இங்கும்ஏராளமான நிதி திரண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+