கர்நாடகத்தில் ஆற்றில் பஸ் விழுந்து 50 பேர் பலி
பீஜப்பூர்:
கர்நாடகம் மாநிலம் பீஜப்பூரில் அரசு பஸ் ஆற்றில் விழுந்ததில 50 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 35 பேரின் உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
நிடுகுன்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை இவ் விபத்து நடந்தது.
குல்பர்கா மாவட்டம் சிதாபூரில் இருந்து ஹூப்ளிக்குச் சென்று கொண்டிருந்த அந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துஅலமாத்தி அணையின் மாபெரும் வாய்க்காலில் விழுந்தது.
குறுகலான வளைவில் திரும்பியபோது 15 அடி ஆழமுள்ள இந்தக் கால்வாக்குள் பஸ் பாய்ந்தது. கால்வாயில் நீர் நிரம்பியிருந்ததால் பஸ்,நீருக்குள் முழுவதுமாக மூழ்கியது.
இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இதுவரை 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 9 பேர் நீந்திக் கரைசேர்ந்துவிட்டனர். மொத்தத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பஸ்ஸை வெளியே இழுக்கும் முயற்சியில் 2 கிரேன்கள் ஈடுபட்டன. ஆனால், பஸ்ஸை வெளியில் எடுக்க முடியவில்லை. இதையடுத்துபஸ்சின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று மீட்புப் பணியினர் உடல்களை வெளியே எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications