நிவாரணம் கோரி கட்டுமர மீனவர்கள் சாலை மறியல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
திருவொற்றியூர் வெந்நீர்குப்பம் பகுதியில் 350க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுனாமி தாக்குதலில் இந்தக்கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கிய சுனாமி நிவாரண உதவிகள் 94 குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்த 270க்கும்மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் கட்டுமரங்களைப் போட்டு இவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் அப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அவர்களுடன் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.













Click it and Unblock the Notifications