+2, 10ம் வகுப்பு தேர்வுகள்: ஒத்திவைக்க பாமக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் கட்சியின் நிறுவனர்டாக்டர் ராமதாசின் பண்ணை வீட்டில் நடந்தது.
இதில், சுனாமி பாதித்த பகுதிகளில் தமிழக அரசு பாரபட்சமின்றி விரைவான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
சுனாமி பாதித்த கடலோரப் பகுதிகளில் மாணவர்கள் புத்தகங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். பள்ளிகளும் இடிந்து போய்விட்டன.எனவே பத்தாம் வகுப்பு மற்றும் 12வது வகுப்புத் தேர்வுகளை 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்.
பிற மாவட்டங்களை பாலைவனமாக்கும் புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.













Click it and Unblock the Notifications